இராஜபாளையம்: லாட்டரி விற்பனை செய்த முதியவர் கைது...

81பார்த்தது
இராஜபாளையம் அருகே லாட்டரி விற்பனை செய்த முதியவர் கைது. லாட்டரி சீட்டு பறிமுதல்.
விருதுநகர் மாவட்டம்,
இராஜபாளையம் அருகே உள்ள சேத்துார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சொக்கநாதன் புத்துார் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நம்பர் லாட்டரி மற்றும் பிற மாநில லாட்டரி சீட்டு விற்பனை செய்யபடுவதாக சேத்துார் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் வந்தன. மேலும் தகவலின் பேரில் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் கோட்டையப்பசாமி தலைமையில் போலீஸார் சம்பவ இடத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த சபரிமலை என்பவர் நம்பர் லாட்டரி மற்றும் பிற மாநில லாட்டரி சீட்டுகள் வைத்து சட்டவிராதமாக விற்பனை செய்வதை பறிமுதல் செய்தனர். பின்னர் சேத்துார் காவல் நிலையத்தில் சபரிமலை மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி