இராஜபாளையம்: கஞ்சா விற்ற நபர் கைது...

69பார்த்தது
இராஜபாளையம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது. கஞ்சா பறிமுதல்.
விருதுநகர் மாவட்டம்,
இராஜபாளையம் அருகே முகவூரில் உள்ள அரசு பள்ளி முன்பாக தளவாய்புரம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் செல்வம் தலைமையில் போலீஸார் வாகன தணிக்கை செய்து வந்தனர். அப்போது பள்ளி அருகே சந்தேகபடி நின்று கொண்டிருந்த நபரை விசாரணை செய்தனர். மேற்படி விசாரணையில் தளவாய்புரம் செட்டியார்பட்டியை சேர்ந்த கிருபாகரன் என்பவர் தான் சட்டை பைபில் கஞ்சாவை மறைத்து வைத்து விற்பனை செய்து வந்தது தெரிய வந்தன. மேலும் அவரிடமிருந்து 60 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸார் தளவாய்புரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி