இராஜபாளையம்: கூட்டுறவு பால் சங்கத்தில்1கோடி மோசடி. 5 பேர் கைது

50பார்த்தது
ராஜபாளையம் பால் கூட்டுறவு சங்கத்தில் ரூ1. 17 கோடி மோசடி
5 பேர் கைது.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் ரூ. 1. 17 கோடி மோசடி செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் 5 பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் இன்று கைது செய்தனர். கடந்த 2020ம் ஆண்டு ஏப்ரல்1ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி 2021 ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் இச்சங்கத்திற்கு புதிய கட்டிடங்கள், விளம்பரம் மற்றும் காலண்டர்கள் அச்சடித்த வகை, மின் சாதனங்கள் கொள்முதல் செய்ததாகவும் மோசடி செய்திருப்பது தணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் சங்கப்பணியாளர்களுக்கு ஆணையர் அனுமதியை மீறி தீபாவளி மற்றும் பொங்கல் பரிசு வழங்கியது என மொத்தம் ரூ. 1. 17 கோடிக்கு பொய்யான ஆவணங்களை தயார் செய்து சங்கத்திற்கு நிதி இழப்பு ஏற்படுத்தியதாக ஆவின் துணைப் பதிவாளர் நாகராஜ் விருதுநகர் மாவட்ட பொருளாதார குற்றப் பிரிவில் புகார் அளித்தார். அதன்பேரில், கூட்டுறவு சங்க நிர்வாகிகளான அப்போதைய சங்கத்தலைவர் வனராஜ், ஓய்வு பெற்ற மேலாளர் முருகேசன், மேற்பார்வையாளர் ஜெயஜீவன், மற்றும் ராஜலிங்கம், தங்க மாரியப்பன், பன்னீர்செல்வம், காளிராஜ், சிவா ஆகிய 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்கு
தொடர்பாக முருகேசன் ராஜலிங்கம், தங்கமாரியப்பன், பன்னீர்செல்வம், காளிராஜ் ஆகிய 5 பேரை இன்று பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி