நரிக்குடி: திமுக ஆட்சியில் நடவடிக்கை இல்லை..அதிமுக சேர்மன் காட்டம்

78பார்த்தது
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் சேர்மன் தலைமையிலும், அதிமுக துணை சேர்மன் அம்மன்பட்டி ரவிச்சந்திரன் முன்னிலையிலும் நடைபெற்றது.
இந்த ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டத்தில் நரிக்குடி கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளரும், அதிமுக துணை சேர்மனுமான அம்மன்பட்டி ரவிச்சந்திரன் பேசுகையில்,நரிக்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட வேலானூரணி ஊராட்சியில் அரசுத் தொடக்கப்பள்ளி தொடங்கிட பலமுறை ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ள நிலையில் கல்வித்துறை அதிகாரிகள் இன்னும் காலதாமதம் செய்து வருவது குறித்து நரிக்குடி வட்டார தொடக்க கல்வி அலுவலர் ரகுநாத் திடம் விளக்கம் கேட்டறிந்தார்.

மேலும் நரிக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள மருதுபாண்டியர் கூட்டரங்கில் மாமன்னர் மருதுபாண்டியர் திருவுருவப் படத்தை கூட்ட அரங்கில் வைக்க பலமுறை தீர்மானம் நிறைவேற்றியும் இந்த திமுக ஆட்சியில் தற்போது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என வன அதிமுக துணை சேர்மன் அம்மன்பட்டி ரவிச்சந்திரன் கடுமையாக சாடினார்.

தொடர்புடைய செய்தி