பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர்

74பார்த்தது
அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டியில் இன்று மக்களுடன் முதல்வர் திட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் வருவாய்த்துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்‌ கலந்துகொண்டு பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களை பெற்றார். மேலும் 71 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா, சாலை விபத்து நிவாரணத் தொகை, தையல் இயந்திரம் என ரூ 13. 8 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் அமைச்சர் வழங்கினார். இதில் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ‌
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி