வயதான தம்பதியரிடம் செல்போன் பறித்த மர்ம நபர்கள்

72பார்த்தது
அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டி பூபாலன் நகரை சேர்ந்தவர் சுப்பையா என்பவரது மனைவி வேலம்மாள்(60). இந்நிலையில் வேலம்மாள் தனது கணவருடன் வீட்டின் வாசலில் அமர்ந்து இருந்தபோது அவ்வழியாக பைக்கில் வந்த இரண்டு மர்ம நபர்கள் வேலம்மாள் கையில் வைத்திருந்த ரூ. 18,000மதிப்புடைய செல்போனை பறித்துக் கொண்டு அங்கிருந்து கன்னிமைக்கும் நேரத்தில் தப்பி ஓடினர். ‌ இதனால் வயதான தம்பதியர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வேலம்மாள் புகாரின் பேரில் டவுன் போலீசார் நேற்று(ஜுலை 14) வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி