பண மோசடி செய்த ஐந்து பேர் கைது

61பார்த்தது
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராஜபாளையம் பால் கூட்டுறவு சங்கத்தில் விதிமுறைகளை மீறி உயர் அதிகாரியின் அனுமதியின்றி விழிப்புணர்வு விளம்பரம் செய்ததாக ஒரு கோடியே 17 லட்சத்து 42 ஆயிரத்தை மோசடி செய்த 5 பேரை பொருளதாரக் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அ. தி. மு. க. , வை சேர்ந்தவர் உட்பட 2பேரிடம் விசாரிக்கின்றனர். தலைமறைவாகியுள்ள ஒருவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

விருதுநகர் மாவட்ட ஆவின் துணைப்பதிவாளர் நவராஜ். இவரது தலைமையில் பால் கூட்டுறவு சங்கங்களில் கணக்கு தணிக்கை செய்யும் பணி நடைபெற்றது. அப்போது, இராஜபாளையம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க கணக்கை தணிக்கை செய்த போது, அதில் 2020-21ம் நிதியாண்டில் கூட்டுறவு சங்க பணம் ரூ. 1 கோடிக்கு மேல் கையாடல் செய்திருப்பது தெரிய வந்தது, சங்க பணத்தை கையாடல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென விருதுநகர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் சங்க முன்னாள் அலுவலர்கள் மற்றும் நிர்வாகிகள் 8 பேர் மீது புகார் அளித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி