பறக்கும் படை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம்

52பார்த்தது
பறக்கும் படை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம்
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதி பறக்கும் படை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் தேர்தல் பார்வையாளர் ஆர். எஸ். ஜார்ஜ் ஜூ(ஐ. ஏ. எஸ்) தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பறக்கும் படை அதிகாரிகள் அனைத்து வாகனங்களையும் முறையாக பரிசோதிக்க வேண்டும், ரூபாய் 50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு செல்லப்படும் போது அதற்கு உரிய ஆவணங்கள் உள்ளதா என பார்க்க வேண்டும் சேலைகள் வேஷ்டிகள் பரிசு பொருட்கள் கண்டுபிடித்து அனைத்திற்கும் உரிய ஆவணங்கள் உள்ளதா என சோதித்து உரிய ஆவணங்கள் இல்லாத பணம் மற்றும் பரிசுப் பொருட்களை பறிமுதல் செய்ய வேண்டும் எனவும் தேர்தல் பார்வையாளர் பறக்கும் படை அதிகாரிகளை அறிவுறுத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் உதவி தேர்தல் அலுவலர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி