போதை ஆசாமி ஒருவர் சாலையின் நடுவில் படுத்து உருண்டு அட்டகாசம்

76பார்த்தது
*அருப்புக்கோட்டை மதுரை சாலையில் போதை தலைக்கு ஏறிய போதை ஆசாமி ஒருவர் சாலையின் நடுவில் டவுசர் வெளியே தெரியும் அளவில் படுத்து உருண்டு அட்டகாசம் செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது*

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் மது அருந்தும் குடிமகன்கள் சில சமயங்களில் போதை தலைக்கு ஏறி ஆங்காங்கே சாலை ஓரங்களில் விழுந்து கிடப்பது வாடிக்கையாகி வருகிறது. இந்நிலையில் இன்று அருப்புக்கோட்டை - மதுரை சாலையில் பொதுத்துறை வங்கி (ஸ்டேட் வங்கி) எதிரே, அரசு மதுபான கடை அருகே போதை தலைக்கு ஏறிய போதை ஆசாமி ஒருவர் சாலையின் நடுவே படுத்து உருண்டு அட்டகாசம் செய்த வீடியோ வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அந்த போதை ஆசாமி தான் அணிந்திருக்கும் டவுசர் வெளியே தெரியும் அளவிற்கு சாலையின் நடுவே படுத்து, சத்தம் போட்டு கொண்டு அனைவரையும் மிரட்டுவது போல் கால் மேல் கால் போட்டு கொண்டு ஏதோ தனது சொந்த வீட்டின் நடுவே படுத்து உருளுவது போல் சுகமாக படுத்து உருளுகிறார். அந்த வழியாக பேருந்துகள் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் சென்ற போதிலும் அதை கண்டு கொள்ளாமல் அந்த ஆசாமி போதையில் சாலையின் நடுவே படுத்து கிடப்பதை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் தங்களது செல்போன்களில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி