பள்ளி மாணவர்கள் முன்பு இரண்டு ஆசிரியர்கள் மோதல்

57பார்த்தது
பள்ளி மாணவர்கள் முன்பு இரண்டு ஆசிரியர்கள் மோதல்
விக்கிரவாண்டி அடுத்த செ. புதூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுந்தரி (வயது 53), செஞ்சி அடுத்த சிறுகடம்பூரை சேர்ந்த வர் பார்வதி (54). இவர்கள் இருவரும் எண்ணாயிரம் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தனர். இந்த நிலையில் பள்ளியில் மாணவர் வருகை குறைவாக இருந்ததால் பாலசுந்தரி கடந்த 9 மாதங்களுக்கு முன்பு அங் கிருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள திருநந்திபுரம் அரசு தொடக்கப்பள்ளிக்கு பணி மாறுதலாகி சென்றார். தனது பணி மாறுதலுக்கு காரணம் பார்வதிதான் என பாலசுந்தரி கருதியதால் இருவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது. இதன் காரணமாக கடந்த 22-ந்தேதி திருநந்திபுரம் பள்ளி வளாகத்தில் மாணவர்கள் முன்னிலையில் இரு ஆசிரியைகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் இருவரும் ஒருவரை ஒருவர் காலணியால் தாக்கிக்கொண்டனர். இதனால் மனமுடைந்த பார்வதி தனது கணவர் தியாகராஜனுக்கு தகவல் தெரிவித்தார். உடனே பள்ளிக்கு விரைந்து வந்து தட்டிக்கேட்டபோது தியாகராஜனையும் பாலசுந்தரி தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் இரு ஆசிரியைகளும் பெரியதச்சூர் போலீஸ் நிலையத்தில் ஒருவர் மீது ஒருவர் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்தி