விழுப்புரம் தெற்கு மாவட்ட
திமுக இளைஞரணி சார்பில் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி, திருவெண்ணெய்நல்லூர்
பேரூராட்சியில் கலைஞர் படிப்பகம் திறப்பு விழா மாவட்டச் செயலாளர் மாவட்ட செயலாளர் நா. புகழேந்தி எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் செ. தினகரன் வரவேற்புரை ஆற்றினார். ஒன்றியச் செயலாளர் பி வி ஆர் விஸ்வநாதன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் அன்பு, ராஜவேல் , பாலாஜி, கலைவாணன், தேவேந்திரன் ஒன்றிய இளைஞர் அணி நிர்மல்ராஜ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். உயர்கல்வி துறை அமைச்சர் க. பொன்முடி இன்று படிப்பகத்தை திறந்து வைத்து மாணவ, மாணவிகளுக்கு புத்தகத்தை வழங்கினார்.