ஆறுபடையப்பன் கோவிலில் கிருத்திகை வழிபாடு நடைபெற்றது

61பார்த்தது
ஆறுபடையப்பன் கோவிலில் கிருத்திகை வழிபாடு நடைபெற்றது
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அடுத்த ஒதியத்துார் குன்றின் மேல் அமைந்துள்ள ஆறுபடையப்பன் கோவிலில் நேற்று கிருத்திகை வழிபாடு நடை பெற்றது. இதையொட்டி, காலை 9: 00 மணிக்கு பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து வள்ளி தெய்வானை சமேத ஆறுபடையப்பன் சுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனை, சிறப்பு தீபாராதனை நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு அருட்பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் ஒதியத்தூர், திருமல் ராயபுரம், மேல்வாலை, கீழ்வாலை, கண்டாச்சிபு ரம் பகுதிகளில் இருந்து பக்தர்கள் ஏராளமானோர் தரிசனம் செய்தனர். ஏற் பாடுகளை கோவில் நிர் வாகிகள், கிராம மக்கள் செய்திருந்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி