நீச்சல் குளத்தில் விளையாடிய குழந்தை பரிதாப சாவு

84பார்த்தது
தென்காசி ரத்தனபுரியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் தனது 2 மகள்கள் மற்றும் உறவினர் குழந்தைகளுடன், அருகே உள்ள தனியார் நீச்சல் குளத்திற்கு குளிக்கச் சென்றுள்ளார். குழந்தைகள் பாதுகாப்பு உபகரணங்களுடன் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்ப்பாராதவிதமாக ராஜேந்திரனின் 2வது மகள் கன்சிகா நீரில் மூழ்கி மயங்கினார். உடனே அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

நன்றி: தந்தி டிவி

தொடர்புடைய செய்தி