அம்பேத்கர் சிலைக்கு பாமக ராமதாஸ் மரியாதை

69பார்த்தது
திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் அண்ணல் அம்பேத்கரின் 134வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு பா. ம. க. , நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு அவரது 134-வது பிறந்த நாளை முன்னிட்டு பா. ம. க நிறுவனர் ராமதாஸ் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ்,

அனைவருக்கும் சித்திரை திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். பின்னர் தேர்தல் நேரத்தில் ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்வது வாடிக்கையான ஒன்று எனவும், தேர்தல் முடிந்த பின் இட ஒதுக்கீடு தொடர்பான போராட்டம் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி