செஞ்சியில் சாலை அமைக்கும் பணி தொடக்கம்

69பார்த்தது
செஞ்சியில் சாலை அமைக்கும் பணி தொடக்கம்
விழுப்புரம் மாவட்டம், செஞ்சிக்கோட்டையில் மாநில நிதிக் குழு (நகா் புற மேம்பாட்டு நிதி) திட்டத்தின் கீழ் ரூ. 1. 03 கோடியில் சாலை அமைக்கும் பணிகளை அமைச்சா் செஞ்சி கே. எஸ். மஸ்தான் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா். செஞ்சிக்கோட்டைக்கு செல்லும் சாலை கடந்த 10 ஆண்டுகளாக சேதமடைந்து காணப்பட்டது. இதனால், செஞ்சிக்கோட்டைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் ஆகியோா் கடும் சிரமத்துக்குள்ளாகி வந்தனா். இதுதொடா்பாக அமைச்சா் செஞ்சி கே. எஸ். மஸ்தானிடம் பொது மக்கள் புகாா் அளித்தனா். தினமணியிலும் செய்தி வெளியானது. இந்த நிலையில், மாநில நிதிக்குழு (நகா்புற மேம்பாட்டு நிதி) திட்டத்தின் கீழ் ரூ 1. 03 கோடியில் திருவண்ணாமலை சாலையில் இருந்து, செஞ்சிக்கோட்டை நுழைவு வாயில் வரையிலும் மற்றும் செட்டிக்குளம் முதல் புதுச்சேரி கேட் வரையிலும், வெங்கட்ராமா் கோயில் முதல் கோட்டை நுழைவு வாயில் வரையிலும் என சுமாா் 2 கி. மீ தொலைவுக்கு சாலைப் பணிகள் மேற்கொள்வதற்கான பூமி பூஜை சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் சி. பழனி தலைமை வகித்தாா். செஞ்சி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் ஆா். விஜயகுமாா், பேரூராட்சி மன்றத் தலைவா் மொக்தியாா் அலிமஸ்தான் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அமைச்சா் செஞ்சி மஸ்தான் பங்கேற்று சாலை அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தாா். நிகழ்வில், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவா் ஏழுமலை, உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி