பஸ்சுக்காக காத்திருந்த மருத்துவ பணியாளர் அரசு பஸ் மோதி இறந்தார்.
விழுப்புரம் அடுத்த பீடாகம் கிராமத்தைச் சேர்ந்தவர் இருசன் மகன் கார்த்திகேயன், 38; வளத்தி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ பணியாளராக பணிபுரிந்து வந்தார். இவர், நேற்று காலை 8: 30 மணியளவில் வளத்தி செல்வதற்காக செஞ்சி கூட்ரோட்டில் திண்டிவனம் சாலையில் நின்றிருந்தார்.
அப்போது வேலுார் செல்லும் அரசு பஸ் அவர் மீது மோதியதில் கார்த்திகேயன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.