சாலை விபத்தில் மருத்துவப் பணியாளர் பலி

82பார்த்தது
சாலை விபத்தில் மருத்துவப் பணியாளர் பலி
பஸ்சுக்காக காத்திருந்த மருத்துவ பணியாளர் அரசு பஸ் மோதி இறந்தார்.

விழுப்புரம் அடுத்த பீடாகம் கிராமத்தைச் சேர்ந்தவர் இருசன் மகன் கார்த்திகேயன், 38; வளத்தி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ பணியாளராக பணிபுரிந்து வந்தார். இவர், நேற்று காலை 8: 30 மணியளவில் வளத்தி செல்வதற்காக செஞ்சி கூட்ரோட்டில் திண்டிவனம் சாலையில் நின்றிருந்தார்.

அப்போது வேலுார் செல்லும் அரசு பஸ் அவர் மீது மோதியதில் கார்த்திகேயன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி