ஆற்றில் குளித்த சகோதரிகள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

64பார்த்தது
ஆற்றில் குளித்த சகோதரிகள் நீரில் மூழ்கி உயிரிழப்பு
கேரளாவின் மலப்புரம் வெங்கராவில் ஆற்றில் குளிக்கச் சென்ற சகோதரிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் வெங்கரை வெட்டுத்தைச் சேர்ந்த அஜ்மலா (21) மற்றும் அவரது சகோதரி புஷ்ரா (27) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். உறவினர் வீட்டிற்கு விருந்துக்கு வந்த இவர்கள், ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற போது எதிர்பாராவிதமாக நீரில் மூழ்கினர். அவர்களை மீட்டு மலப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அப்பகுதியினர் கொண்டு சென்றனர், ஆனால் அவர்களது உயிரை காப்பாற்ற முடியவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி