செஞ்சி அருகே நூதன முறையில் மோசடி போலீசார் விசாரணை

51பார்த்தது
செஞ்சி அருகே நூதன முறையில் மோசடி போலீசார் விசாரணை
செஞ்சி பீரங்கிமேட்டை சேர்ந்தவர் அப்துல்ஷபி, 48; இவரை கடந்தாண்டு மொபைல் போனில் தொடர்பு கொண்ட நபர், வங்கியில் இருந்து பேசுவதாகவும், கிரிடிட் கார்டின் தொகையை உயர்த்தி தருவதாக கூறினார். அதனை நம்பி அப்துல்ஷபி, மர்ம நபர் கேட்ட வங்கி மற்றும் கார்ட்டில் பின் நம்பர்களை ஆன்லைனில் பதிவிட்டார். அடுத்த சில நிமிடங்களில் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ. 2, 01, 529 தொகையை, 7 தவணைகளாக மர்ம நபர்கள் எடுத்து மோசடி செய்துள்ளனர். இதுகுறித்த புகார்களின் பேரில் விழுப்புரம் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.

தொடர்புடைய செய்தி