விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் இயங்கி வரும் கோவிந்தசாமி அரசு கலைக்கல்லூரியில் கௌரவ விரிவுரையாளர்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு வரையறை செய்துள்ள ஊதியம் ரூ. 57,700ஐ வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற வேண்டும் எனக் கூறி எழுவதுக்கும் மேற்பட்டோர் நேற்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை 10 மணிக்கு தொடங்கிய உள்ளிருப்பு போராட்டமானது பிற்பகல் வரை நீடித்தது.