கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் அதனையொட்டியுள்ள பகுதிகளில் காதலர் தின மலர் ஏற்றுமதி மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ஒவ்வொரு ஆண்டும் இங்கிருந்து, அதிக அளவில் வெளிநாடுகளுக்கு மலர் ஏற்றுமதி செய்யப்பட்டு கோடிக்கணக்கான ரூபாய் வர்த்தகம் ஈட்டப்படுவது வழக்கம். இந்நிலையில், இந்தாண்டு திடீரென கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து மலர்கள் இறக்குமதி செய்யப்படுவதாக வரும் தகவலால் மலர் உற்பத்தியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதுடன் பிளாஸ்டிக் மலர்கள் வரவு காரணமாக கடுமையான இழப்பை சந்தித்து வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.