சென்னை வடபழனி பணிமனைக்கு உட்பட்ட மாநகர பேருந்தில் ஒப்பந்த ஓட்டுநர் மற்றும் நடத்துனராக பணியாற்றி வந்த இருவர் பேருந்தை இயக்கி கொண்டு ஆபத்தான முறையில் ரீல்ஸ் எடுத்துள்ளனர். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலான நிலையில் இருவரையும் பணிநீக்கம் செய்ய சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனத்திற்கு மாநகர் போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக பணியின் போது ஊழியர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.