விக்கிரவாண்டி தொகுதியும், இடைத்தேர்தல்களும்.. தொடரும் மரணம்!

51பார்த்தது
விக்கிரவாண்டி தொகுதியும், இடைத்தேர்தல்களும்.. தொடரும் மரணம்!
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் வரவுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் போட்டியிட்டு திமுகவைச் சேர்ந்த ராதாமணி என்பவர் வெற்றி பெற்றார். அவர் 2019ஆம் ஆண்டு ஜுன் மாதம் காலமானார். தொடர்ந்து அந்த தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் போட்டியிட்ட அதிமுகவைச் சேர்ந்த முத்தமிழ்ச் செல்வன் வெற்றிபெற்றார். திமுக சார்பில் போட்டியிட்ட புகழேந்தி தோல்வியடைந்தார்.

தொடர்ந்து 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட புகழேந்தி வெற்றி பெற்ற நிலையில், அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வன் தோல்வியடைந்தார். இந்த நிலையில், எம்எல்ஏவாக 3 ஆண்டுகள் பதவி வகித்த புகழேந்தி, இன்று காலை உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதனால் விரைவில் இந்த தொகுதி காலி என அறிவிக்கப்பட்டு, இடைத்தேர்தல் நடத்தப்படும்.

தொடர்புடைய செய்தி