ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்தே தேர்வு ரத்துதான்

84பார்த்தது
ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்தே தேர்வு ரத்துதான்
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் கனிமொழி நேற்று (ஏப்ரல் 5) தூத்துக்குடியில் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், நீட் தேர்வு தொடர்பாக திமுக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நடத்தி வருகிறது வழக்கில் வெற்றி பெற்று இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்து முதல் கையெழுத்துப் போடப்படும். மேலும் கல்விக்கடன், விவசாயக் கடன் ரத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி