விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். விக்கிரவாண்டி அருகேயுள்ள வி.சாலையில் நேற்றைய தினம் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் எம்எல்ஏ புகழேந்தி மேடையிலேயே மயக்கமடைந்தார். இதனையடுத்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்த அவரது உடல்நிலை மோசமடைந்தது. இன்று காலை மூச்சுத்திணறல் ஏற்பட்டதை அடுத்து அவரது உயிர் பிரிந்தது. திமுக தொண்டர்கள் அதிகளவில் மருத்துவமனையில் திரண்டுள்ளனர். ஐசியுவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
2019ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் தோல்வியடைந்த நிலையில், 2021ஆம் ஆண்டு அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளராகவும், அமைச்சர் பொன்முடியின் நம்பிக்கைக்குறியவராகவும் இருந்து வந்தார்.