விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - 4 முனைப்போட்டி!

7410பார்த்தது
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - 4 முனைப்போட்டி!
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்யும் பணி தொடங்கியுள்ளது. திமுக எம்.எல்.ஏ புகழேந்தி கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி மறைந்ததை தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதிக்கு வருகிற ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயச்சந்திரன், விவசாய தொழிலாளர் அணி செயலாளர் அன்னியூர் சிவா பெயர்கள் பரிசீலனையில் உள்ளன. அதே போல், புகழேந்தியின் மருமகள் பிரசன்னா தேவியும் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார்.

அதிமுக சார்பில் கடந்தமுறை போட்டியிட்டு தோல்வியடைந்த முத்தமிழ்ச்செல்வனுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என கூறப்படுகிறது. அதே போல் பாஜக கூட்டணியில் உள்ள பாமக இந்த தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்ததால் பாஜக போட்டியிடாது. அதே போல் நாம் தமிழர் கட்சி அங்கீகரிக்கப்பட்ட மாநிலக்கட்சியாக மாறியுள்ளதால், இந்த இடைத்தேர்தலில் பலம் வாய்ந்த வேட்பாளரை நிறுத்த ஆயத்தமாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி