மக்களவை சபாநாயகர் பதவிக்கான போட்டியில் ஆந்திர மாநில பாஜக தலைவர் புரந்தேஸ்வரி முன்னிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திராவின் ராஜமுந்திரி தொகுதியில் போட்டியிட்டு வென்ற N.T.ராமராவின் மகளான புரந்தேஸ்வரிக்கு சபாநாயகர் பதவியை வழங்க பாஜக மேலிடம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பள்ளி, கல்லூரி படிப்பை சென்னையில் முடித்த புரந்தேஸ்வரி தெலுங்கு, தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் பிரெஞ்ச் மொழிகளில் புலமை வாய்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.