சொல்லுதல் யாவருக்கும் எளியவாம் - துரைமுருகன் பேட்டி

70பார்த்தது
வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் பேராசிரியர் அன்பழகனின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு காட்பாடி தெற்கு பகுதி திமுக சார்பில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில் அன்பழகன் திருவுருவப் படத்திற்கு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இதில் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கு பின்னர் அமைச்சர் துரைமுருகனிடம், ஒவ்வொரு மாநில மொழிக்கும் மத்திய அரசு முக்கியத்துவம் தந்து வருகிறது என அமித்ஷா பேசியது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு.

பெரிய மனிதர்கள் எது வேண்டுமானாலும் பேசிவிட்டு போகலாம்.

மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளை தமிழ் மொழியில் வழங்க முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என அமித் ஷா பேசியுள்ளாரே எனக் கேட்டதற்கு சொல்லுதல் யாவருக்கும் எளியவாம் என்றார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி