திருப்பத்தூர் அருகே மாடப்பள்ளியை சேர்ந்தவர் சிவகுமார் (45). இவர், திருப்பத்தூரில் உள்ள பி. எஸ். என். எல். அலுவலகத்தில், தற்காலிக காவலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு நிஷாந்தினி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்
இந்த நிலையில் நேற்று காலை வேலைக்கு வந்த சிவகுமார், அலுவலக மாடிக்கு சென்றார். வெகுநேரமாகியும் அவர் கீழே வராததால், சந்தேகம் அடைந்த சக ஊழியர்கள் மாடிக்கு சென்று பார்த்தபோது, அங்கு சிவகுமார் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிவகுமாரின் உடலை மீட்டு, திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.