எஸ் பி தலைமையில் பொதுமக்கள் குறைத்தீர்வு கூட்டம்!

68பார்த்தது
ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாரம் தோறும் நடைபெறும் பொதுமக்கள் குறை தீர்வு கூட்டம் எஸ்பி கிரண் சுருதி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த மக்கள் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனுக்களை அளித்தனர்.

மனுக்களை பெற்றுக் கொண்ட எஸ்பி மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட போலீசாருக்கு உத்தரவிட்டார். மேலும் இன்று நடைபெற்ற குறைதீர்ப்பு கூட்டத்தில் மொத்தம் 33 மனுக்கள் பெறப்பட்டதாக ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி