வாலாஜா: சீனிவாச பெருமாள் திருக்கோவில் கும்பாபிஷேகம் விழா!

65பார்த்தது
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை சீனிவாச தெரு வீதியில் அருள்பாளித்து வரும் மிகவும் பழமை வாய்ந்த திருத்தலமான அருள்மிகு ஸ்ரீ தேவி பூமிதேவி ஸ்ரீ பத்மாவதி சமேத ஶ்ரீ சீனிவாச பெருமாள் திருக்கோவிலில் ஐந்து நிலை ராஜகோபுரம் பிரதிஷ்டை செய்யப்பட்டு அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

வேத பட்டாட்சியர்கள் பூஜை செய்யப்பட்ட அனைத்து கலசத்தை தலையில் சுமந்து நாதஸ்வரம் மேளதாளம் முழங்க கோவிலில் வலம் வந்து ஐந்து நிலை ராஜ கோபுரம் மற்றும் விமான கோபுரங்களுக்கு வந்தடைந்ததும் கலசத்தின் மீது புனித நீரை ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடந்து மஹா தீபாரதனை காண்பித்தனர்.

அதனைத்தொடர்ந்து கலசத்தின் மீது ஊற்றப்பட்ட புனித நீரை கோவில் வளாகத்தின் கீழே இருந்த பக்தர்கள் மீது தெளித்தபோது கோவிந்தா. கோவிந்தா. என பக்தி முழக்கமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி