ஐசிசி தலைவராக ஜெய் ஷா போட்டியின்றி தேர்வு

578பார்த்தது
ஐசிசி தலைவராக ஜெய் ஷா போட்டியின்றி தேர்வு
சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ஐசிசி) தலைவராக இருக்கும் கிரெக் பார்க்லேவின் பதவிக்காலம் வரும் நவம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான பணிகளை ஐசிசி நிர்வாகம் தொடங்கியது. இந்நிலையில் இரண்டு ஆண்டுகள் பதவிக்காலம் கொண்ட ஐசிசி தலைவர் பதவிக்கு இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளரும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகனுமான ஜெய் ஷா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி