மீன் பிடிக்க சென்றவர் ஏரியில் மூழ்கி பலி!

53பார்த்தது
மீன் பிடிக்க சென்றவர் ஏரியில் மூழ்கி பலி!
வாலாஜா தாலுகா வேப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முபாரக் ஷரீப் (32 ) நேற்று காலை 11 மணியளவில் வேப்பூர் ஏரியில் மீன் பிடிக்க சென்றவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து இன்று ஏரியில் அவரது சடலம் மிதந்தது. ஆற்காடு டவுன் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மீன்பிடிக்க சென்று ஏரியில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்தி