
குடியாத்தத்தில் கழிவுநீர் கால்வாய் கட்டுவதற்கு பூமி பூஜை
குடியாத்தம் நகராட்சிக்கு உட்பட்ட 13ஆவது வார்டு பகுதி ஆர். எஸ். ரோடு பகுதியில், கழிவுநீர் கால்வாய் கட்டுவதற்கு இன்று பூமி பூஜை போடப்பட்டது. இதில் குடியாத்தம் நகர மன்ற தலைவர் சௌந்தரராஜன் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார். அவருடன், நகராட்சி ஆணையர் மங்கையர்கரசன், நகர மன்ற உறுப்பினர்கள் மேகநாதன், மகாலிங்கம், நகராட்சி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.