13 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிட மாற்றம்: கலெக்டர் உத்தரவு

70பார்த்தது
வேலூர் மாவட்டத்தில் பணிபுரியும் 13 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஒரு துணை வட்டார வளர்ச்சி அலுவலருக்கு வட்டார வளர்ச்சி அலுவலராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

அவர்கள் விவரம் வருமாறு: பேரணாம்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) வின்சென்ட் ரமேஷ்பாபு வேலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைக்கும் (100 நாள் வேலை திட்டம்), அங்கு பணிபுரிந்த திருமலை அணைக்கட்டுக்கும் (கிராம ஊராட்சி), அங்கு பணிபுரிந்த சத்தியமூர்த்தி பேரணாம்பட்டுக்கும் (கிராம ஊராட்சி), வேலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை (நிர்வாகம்) வட்டார வளர்ச்சி அலுவலர் சுதாகரன் அணைக்கட்டு வட்டார வளர்ச்சி அலுவலராகவும், அங்கு பணிபுரிந்த ராஜன்பாபு வேலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கண்காணிப்பாளராகவும், அங்கு பணிபுரிந்த நந்தகுமார் குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோன்று குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலர் கல்பனா வேலூர் ஊராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்துக்கும், குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) பெருமாள் கே. வி. குப்பத்துக்கும் (கிராம ஊராட்சி), அங்கு பணிபுரிந்த அமுதவள்ளி வேலூருக்கும் (கிராம ஊராட்சி), அங்கு பணிபுரிந்த எழிலரசி கணியம்பாடி வட்டார வளர்ச்சி அலுவலராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி