திருமாவளவன் முதன்முதலாக ஊன்றிய கட்சி கொடிக்கம்பம் அகற்றம்

69பார்த்தது
மதுரை புதூரில் விசிக கொடி கம்பத்தை காவல்துறை அகற்றியுள்ளது. கட்சி தொடங்கிய போது முதன்முதலாக திருமாவளவனால் ஏற்றி வைக்கப்பட்ட முதல் கம்பம் இதுவாகும். அனுமதியின்றி 62 அடி உயரத்திற்கு கொடி கம்பத்தை உயர்த்தியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை விளக்கமளித்துள்ளது. இன்று திருமாவளவன், கொடியேற்ற இருந்த நிலையில் கம்பம் அகற்றப்பட்டதால் கட்சியினர் அதை கண்டித்து மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

நன்றி: புதிய தலைமுறை

தொடர்புடைய செய்தி