கே வி குப்பம் அடுத்த வேப்பங்கநேரி கிராமத்தில் கெங்கையம்மன் சிரசு விழா நடந்தது. விழா முன்னிட்டு நேற்று காலை6 மணிக்கு பிள்ளையார் கோயிலில் அம்மன் சிரசுக்கு பூஜை வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து. அம்மன் சிரசு கிராமத்தில் வீதி உலா வந்தது. பகல் 3 மணிக்கு கோயிலில் அம்மன் சிரசு ஏற்றபட்டு, கண் திறப்பு நிகழ்வு நடந்தது. ஊர் மக்கள் அம்மனுக்கு சீர்வரிசை வைத்தனர். பக்தர்கள் பொங்கல் வைத்தல், கூழ்வார்த்தல் நடத்தினர். பக்தர்கள் வேண்டுதல் நிறைவேற விரதம் இருந்து , கோலட்டம், சிலம்பாட்டம், ஆகவே நடத்தினர். கிராமத்து இளைஞர்கள் மேல தாலத்துடன் தண்டு மாலையை ஊர்வலமாக எடுத்து வந்து அம்மனுக்கு சாத்தினர். உள்ளூர், மற்றும் வெளியூரை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை வணங்கி சென்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 7 மணிக்கு வாண வேடிக்கை நிகழ்ச்சி நடந்தது. விழா ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் இளைஞர்கள் செய்தனர் ( பட விளக்கம் ) கே வி குப்பம் அடுத்த வேப்பங்கநேரி கிராமத்தில் கெங்கை அம்மன் சிரசு விழாவில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.