லால்பாக் எக்ஸ்பிரஸ் காட்பாடி வரை மட்டும் இயக்கப்படும்

1900பார்த்தது
சென்னை கோட்டத்தில் பாதுகாப்பு பணிகள் காரணமாக பின்வரும் ரயில்களின் பகுதி ரத்து செய்து மறு அட்டவணையை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி கர்நாடக மாநிலம் பெங்களூரு ரயில் நிலையத்திலிருந்து சென்னை வரை செல்லும் லால்பாக் எக்ஸ்பிரஸ் வருகிற 24-ஆம் தேதி பெங்களூர் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு ஜோலார்பேட்டை வழியாக காட்பாடி வரை மட்டும் செல்லும்.

அதன் பிறகு காட்பாடி ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும் அதே நாளில் சென்னையில் இருந்து மைசூர் செல்லும் மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் சென்னையிலிருந்து காட்பாடி வரை ரத்து செய்யப்பட்டு லால்பாக் எக்ஸ்பிரஸ் ரயிலை மைசூர் எக்ஸ்பிரஸ் ரயிலாக மாற்றி காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து ஜோலார்பேட்டை வழியாக மைசூர் செல்லும் மற்ற நாட்களில் பழைய அட்டவணைப்படி ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்படும்.

மேலும் சில குறிப்பிட்ட ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் ரயில் பயணிகள் முன்கூட்டியே தங்களது பயணத்தை மாற்றி அமைத்துக் கொள்ளலாம் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி