எஸ்பி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம்!

65பார்த்தது
இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி தலைமையில் நடைபெற்றது. இக்குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்களிடம் மொத்தமாக 39 மனுக்கள் பெறப்பட்டன.

மனுக்களை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்தார்கள். மேலும் துணை காவல் கண்காணிப்பாளர்கள் சீராளன் (மாவட்ட குற்ற ஆவண காப்பகம்), பிரபு (இராணிப்பேட்டை உட்கோட்டம்) , வெங்கட கிருஷ்ணன் (CWC) மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் அருண்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி