அரக்கோணம்: வாலிபர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்!

51பார்த்தது
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த மணிகண்டன் (19) என்பவரை போலீசார் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்திருந்தனர்.

இந்த நிலையில் மீண்டும் மணிகண்டன் சிறையில் இருந்து வெளியே வந்து குற்ற செயல்களில் ஈடுபடாமல் இருக்க குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய ராணிப்பேட்டை மாவட்ட எஸ்பி கிரண் சுருதி ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதிக்கு பரிந்துரை செய்தார்.

பரிந்துரையை ஏற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் வளர்மதி மணிகண்டனை குண்டத்தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து அதற்கான நகலை அரக்கோணம் நகர காவல் நிலைய போலீசார் வேலூர் மத்திய சிறையில் உள்ள மணிகண்டனிடம் வழங்கினர்.

தொடர்புடைய செய்தி