*திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் இன்று 13, 750 மாணவ மாணவியர் பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர். *
தமிழகம் முழுவதும் இன்று பதினோராம் வகுப்பு மாணவ மாணவியருக்கு பொதுத்தேர்வு துவங்கி உள்ள நிலையில்.
திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் உள்ள வாணியம்பாடி ஆம்பூர் திருப்பத்தூர் நாட்றம்பள்ளி ஆலங்காயம் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் பள்ளிகளை உள்ளடக்கி பதினோராம் வகுப்பு பொது தேர்வு எழுத 58 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து 6493 மாணவர்கள் 7257 மாணவிகள் என மொத்தம் 13750 மாணவ மாணவியர் இன்று தேர்வு எழுதினர்.
முன்னதாக அனைத்து தேர்வு மையங்களிலும் துறை சார்ந்த அதிகாரிகளால் அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு தேர்வு எழுதுவதற்கு முன்பு மாணவ மாணவியரை பரிசோதித்து தேர்வு எழுத அனுமதித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.