பள்ளத்தில் 3 மணி நேரமாக சிக்கிய லோடு டிராக்டர்!

531பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ரெட்டிதோப்பு 6 வது தெருவில் பல மாதங்களாக தோண்டப்பட்டு சாலை போடாமல் கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலுக்காக அவசர அவசரமாக சாலை போடப்பட்டது. இந்த சாலை நடுவில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் இணைப்புக்காக தோண்டப்பட்ட பள்ளங்களை மூட நகராட்சி நிர்வாகம் மற்றும் பகுதி திமுக கவுன்சிலர் லட்சுமி யுவராஜிடம் அப்பகுதி மக்கள் முறையிட்டும் கண்டு கொள்ளாமல் இருந்த நிலையில் இன்று அவ்வழியாக விறகு ஏற்றிச் சென்ற டிராக்டர் ஒன்று பள்ளத்தில் சிக்கியதால் சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக மீட்க முடியாமல் மாற்று வாகனம் வரவழைத்து விறகு லோடு மாற்றிய பிறகு பள்ளத்தில் சிக்கிய டிராக்டரை மீட்டனர்.

மேலும் அவ்வழியாக செல்லும் நகராட்சி குப்பை வாகனம் மற்றும் சரக்கு வாகனங்கள் அடிக்கடி பள்ளத்தில் சிக்கி தவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதால் உடனடியாக நகராட்சி நிர்வாகம் சாலையின் நடுவே உள்ள பள்ளங்களை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி