ஆம்பூர் சுற்று வட்டார பகுதிகளில்வெளுத்து வாங்கிய கனமழை!

54பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கன்னிகாபுரம், வீரவர்கோயில் , பச்சகுப்பம், மாதனூர், திருமலைகுப்பம், பாலூர், தேவலாபுரம், சான்றோர்குப்பம், உள்ளிட்ட பகுதிகளில் காலை முதலே வெயில் கோடை வெயில் போல் சுட்டெரித்து வந்த நிலையில் திடீரென இரவு நேரத்தில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது இந்த கனமழையால் மழைநீர் வடிகால் கால்வாய்கள் சரிவர தூர்வாராததால் நேதாஜிசாலை , உமர் சாலை , ரெட்டிதோப்பு, பஜார் உள்ளிட்ட முக்கிய சாலைகளில் ஆங்காங்கே மழைநீர் வெள்ளம் போல் தேங்கியாதால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் மழை நீரில் நீந்தியபடி சென்றனர் மேலும் ஆட்டோக்கள் பழுதாகி வெள்ள நீரில் நின்றதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்

மேலும் கனமழை பெய்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தொடர்புடைய செய்தி