டெல்லியில் இருந்து வாரணாசி செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் மேற்கூரையில் இருந்து தண்ணீர் சொட்டுகிறது. இதனால் பயணிகள் இருக்கையில் அமர முடியவில்லை என குற்றம்சாட்டுகின்றனர். பெரும் தொகை கொடுத்து டிக்கெட் வாங்கினால், இருக்கையில் அமரக்கூட முடியவில்லை என பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்த சம்பவத்தை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ வைரலானதால், ரயில்வே துறை பயணிகளின் சிரமத்திற்கு மன்னிப்புக் கேட்டுள்ளது.