உச்ச நீதிமன்ற் தீர்ப்புக்கு உத்தவ் தாக்கரே வரவேற்பு!

377பார்த்தது
உச்ச நீதிமன்ற் தீர்ப்புக்கு உத்தவ் தாக்கரே வரவேற்பு!
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பு சட்டத்தின் 370வது பிரிவை நீக்கியது செல்லும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு சிவசேனா (யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே வரவேற்பு தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளும் விரைவில் ஜம்மு காஷ்மீருடன் இணைக்கப்படும் என நம்புகிறோம், இதனால் நமது நாட்டின் பிரிக்க முடியாத பகுதியான 'கிரேட்டர்' காஷ்மீரில் தேர்தல் நடத்தப்படும்; உத்தரவாதம் என்ற வார்த்தை இப்போது பிரபலமாகிவிட்டது. காஷ்மீர் பண்டிட்டுகள் தற்போது தாயகம் திரும்பி தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்துவதற்கு பிரதமர் மோடி உத்தரவாதம் அளிப்பாரா? என உத்தவ் தாக்கரே கேள்வியெழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்தி