36 பேரை பலிகொண்ட தொடர்மழை

52பார்த்தது
36 பேரை பலிகொண்ட தொடர்மழை
அசாம் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஆற்றங்கரையோர பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த தொடர் மழை மற்றும் வெள்ளப்பெருக்கினால் 19 மாவட்டங்களில் உள்ள 4 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த ஆண்டு மழை, வெள்ளம், நிலச்சரிவு மற்றும் புயல்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36ஆக உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்தி