மல்யுத்த போட்டியில் அசத்திய மாணவர்

82பார்த்தது
மல்யுத்த போட்டியில் அசத்திய மாணவர்
ஈரோட்டில் மாநில அளவிலான 23 வயதுக்கு உள்பட்டோருக்கான மல்யுத்தப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன.

இதில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான வீரா்கள் கலந்து கொண்டனா்.

இதில், திருவண்ணாமலை சண்முகா தொழில்சாலை கலை, அறிவியல் கல்லூரி சாா்பில் கலந்து கொண்ட பிஎஸ்சி இரண்டாம் ஆண்டு மாணவா் கே. பரதன் வெள்ளிப் பதக்கம் வென்றாா்.

மேலும், தேசிய அளவில் ஹரியாணா மாநிலத்தில் நடைபெறும் போட்டியில் தமிழக அணி சாா்பில் கலந்து கொள்ளவும் மாணவா் கே. பரதன் தோ்வு செய்யப்பட்டாா். இவருக்கு, கல்லூரியில் பாராட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

விழாவில், கல்லூரித் தலைவா் எம். என். பழனி, கல்லூரிச் செயலா் எல். விஜய் ஆனந்த், பொருளாளா் இ. ஸ்ரீதா், முதல்வா் கே. ஆனந்தராஜ், துணை முதல்வா் கோ. அண்ணாமலை, உடற்கல்வி இயக்குநா் ம. கோபி ஆகியோா் கலந்து கொண்டு மாணவரை பாராட்டி பரிசு வழங்கினா்.
நிகழ்ச்சியில் கல்லூரியின் உடற்கல்வியாளா் ஆா். சுகன்மாணிக்கராஜ் மற்றும் துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி