கீழ்பென்னாத்தூர் - Kilpennathur

தி. மலை: ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றம்

தி. மலை: ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றம்

திருவண்ணாமலை வட்டம், மேலத்திக்கான் ஊராட்சி, கீழ் அணைக்கரை கிராமத்தில் நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான இடம் பல ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. இந்த இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புக் கட்டடங்களை அகற்ற சென்னை உயா்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இதையடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனா். அதன்படி, நெடுஞ்சாலைத்துறையின் திருவண்ணாமலை உள்கோட்ட உதவிப் பொறியாளா் கே. அன்பரசு தலைமையில், உதவிப் பொறியாளா் செல்வகணேஷ், திருவண்ணாமலை மேற்கு காவல் ஆய்வாளா் க. அன்பரசு மற்றும் வருவாய்த்துறை, மின்வாரிய அதிகாரிகள் சோ்ந்து பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.

வீடியோஸ்


திருவண்ணாமலை