மனு அளித்தவர்களுக்கு உடனடி தீர்வு

71பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியம், சோமாசிப்பாடி புதூர் கிராமம் சரவணபவ மஹாலில் நேற்று (15. 07. 2024) நடைபெறும் மக்களுடன் முதல்வர் முகாமில், பட்டா மாறுதல் வேண்டி மனு அளித்தவர்களுக்கு வருவாய்த்துறை சார்பில் உடனடியாக தீர்வு காணப்பட்டு சான்றிதழ்களை தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத் தலைவரும், கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான கு. பிச்சாண்டி மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன், இஆப. , வழங்கினார்கள். மேலும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வதார இயக்கம் சார்பில் மகளிர் குழுக்களுக்கு கடன் உதவி வழங்கினர். இதில் ஒன்றிய செயலாளர் ஆரஞ்சு ஆறுமுகம், அரசு அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி