திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் பங்குனி மாத தேய்பிறை பிரதோஷ தினமான நேற்று சாமி தரிசனம் மேற்கொண்ட பிரபல தமிழ் திரைப்பட நடிகை சினேகா தனது கணவருடன் இணைந்து கிரிவலம் மேற்கொண்டார்.
14 கிலோமீட்டர் தொலைவு உள்ள கிரிவலம் பாதையில் இந்திரலிங்கம், அக்னி லிங்கம், எமலிங்கம் வாயு லிங்கம் உள்ளிட்ட அஷ்ட லிங்கங்களையும், திருநேர் அண்ணாமலையார் உள்ளிட்ட அனைத்து திருக்கோவிலிலும் மாஸ்க் அணிந்து கொண்டு தரிசனம் மேற்கொண்ட சினேகா மற்றும் அவரது கணவர் பிரசன்னா கிரிவலப் பாதையில் மனமுருக சாமி தரிசனம் செய்தனர்.
இரவு நேரத்தில் மாஸ்க் அணிந்து கொண்டு விடிய விடிய கிரிவலம் மேற்கொண்ட திரைப் பிரபலங்களை கண்ட திருநங்கைகள் மற்றும் பக்தர்கள் அவருடன் நின்று செல்பியும், குழு புகைப்படமும் எடுத்து உற்சாகமடைந்தனர்.