உடுமலைபேட்டை - Udumalaipettai

உடுமலை மாரியம்மன் கோயில் தேரோட்டம்- வீடியோ

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அருள்மிகு மாரியம்மன் கோவில் தேர்திருவிழா கடந்த ஏப்ரல் 1ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் தொடங்கியது. பின்னர் கம்பம் போடுதல், கொடியேற்றம் நிகழ்ச்சி தினமும் முக்கிய விதியில் அம்மன் திருவீதி உலா, திருக்கல்யாணம், மாவிளக்கு பூஜை எடுத்தல், உடம்பில் கத்தி போட்டு நூதன வழிபாடு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நிகழ்வுகள் வெகு சிறப்பாக நடைபெற்றது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றது. 9 நிலைகளுடன் கூடிய திருத்தேர் அலங்கரிக்கப்பட்ட கலசம் ஏற்றப்பட்டு வண்ண துணிகள் மூலம் அலங்கரிக்கப்பட்ட தேரானது மாரியம்மன் கோவில் பகுதியில் இருந்து கேரளாவில் இருந்து வந்த மணிகண்டன் (30) என்ற ஆண் யானையின் உதவியால் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களால் வடம் பிடித்து துவங்கியது.  தேர் பழனி சாலை, தளி ரோடு, குட்டை திடல், கொல்லம்பட்டறை வழியாக வந்து மாரியம்மன் கோவிலை அடைந்தது. தேர்திருவிழாவில் உடுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் அதிகளவில் வருகை புரிந்து அம்மனை தரிசனம் செய்தனர். உடுமலை மாரியம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு உடுமலை-பழனி, பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. தேர் திருவிழாவை முன்னிட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் 1000க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

வீடியோஸ்


కామారెడ్డి జిల్లా